முன்பதிவில்லாத ரயில் நாளை முதல் இயக்கம்….

திருச்செந்தூர் – பாலக்காடு  ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 16 முதலும் பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 17 முதலும் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்டி எண் 16732 திருச்செந்தூர் – பாலக்காடு முன்பதிவில்லாத விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு பாலக்காடு சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16731 பாலக்காடு – திருச்செந்தூர் முன்பதிவில்லாத விரைவு ரயில் டிசம்பர் 17 முதல் பாலக்காட்டில் இருந்து அதிகாலை 04.55 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேரும். இந்த ரயில்கள் பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடா, மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, தாழையூத்து திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, நாசரேத் கச்சினாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!