கேரளாவில் பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் வாத்துக்களைக் கொன்று தீயிட்டு எரித்து வரும் பணியாளர்கள்

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் கொன்று எரிக்கப்படுகின்றன.

கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் ஒரு சில பண்ணைகளில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக விச்சூர், ஐமணம் ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் உள்ள அனைத்து வாத்துகளையும் கொன்று எரிக்கும் பணியில் நலவாழ்த்துறை அலுவலர்கள் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!