அமெரிக்காவில் ஓமிக்ரான் மிகவும் வேகமாக பரவத் தொடங்கும்

அமெரிக்காவில் ஓமிக்ரான் மிகவும் வேகமாக பரவத் தொடங்கும் என அதிபர் ஜோபைடன் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும், இது அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவத்தொடங்கும் என்றும் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். தடுப்பூசி போடாதவர்கள் மரணத்தை கூட சந்திக்கலாம் என குறிப்பிட்ட அவர் எனவே மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தடுப்பூசி மட்டுமே நமக்கு உண்மையான பாதுகாப்பை வழங்கக்கூடியது எனவும் கூறினார். தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் அனைவரும் உணர வேண்டும் என வலியுறுத்திய அவர், முழுமையான தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார்

 

Translate »
error: Content is protected !!