கரை ஒதுங்கியது 12 வயது சிறுவனின் உடல்

வேளாங்கண்ணி கடலில் அடித்து செல்லப்பட்ட 12 வயது சிறுவனின் உடல் கரை ஒதுங்கியது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு பெங்களூர் வைசாலா நகரைச் சேர்ந்த தயாளன் மகன் கெல்வின்(12) தனது தாய் ஞானமணி மற்றும் அவரது உறவினர்கள் ஐந்து நபர்களுடன், சுற்றுலா வந்தவர்கள் வேளாங்கண்ணி கடற்கரை வெள்ளையாற்று முகத்துவாரத்தில் இறங்கி குளித்தபோது, கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டான் காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இருந்தபோது பிரதாபராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமர்மடம் கடற்கரையில், சிறுவன் கரை ஒதுங்கியது உடலை கைப்பற்றிய கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் பெங்களூரை சேர்ந்த சிறுவன் வேளாங்கண்ணியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!