உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியாக 609 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில நிதி ஆணையத்தின் படி, நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 609 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 12 ஆயிரத்து 565 கிராம ஊராட்சிகளுக்கு, மாதம் தலா 60 ஆயிரம் வீதம் இரண்டு மாதங்களுக்கு 150 கோடியும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாதம் தலா 3 லட்ச ரூபாய் வீதம், இரண்டு மாதங்களுக்கு 23 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி நிதியாக 202 கோடி ரூபாயும், கிராமம், ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான வளர்ச்சி நிதியையும் ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது