சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவல்

சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது, அதே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் 3 வழக்குகளும், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் 3 வழக்குகளும் உள்ளன. இதற்கிடையில் சென்னை மெட்ரோ சிபிசிஐடி போலீசாரும், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் இன்று சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும், அடுத்த மாதம் 4ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்

Translate »
error: Content is protected !!