தஞ்சாவூர்: ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர், திருமங்கலக்குடி கிராமத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவர் கடந்த 19ம் தேதி லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார்,

இந்நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மீண்டும் பரிசோதனை செய்ததில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவருக்கு ஒமைக்ரான் பாதிப்புக்கான அறிகுறிகளைக் தென்பட்டதை அடுத்துமரபணு ஆய்வுக்காக அவரது மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டன.

Translate »
error: Content is protected !!