தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 2ம் தேதி இந்தியாவுக்குள் இந்த வைரஸ் நுழைந்தது. தற்போது எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. இது டெல்டா வைரஸை விட குறைந்தது 3 மடங்கு வேகமாகப் பரவும் என்று கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், 41 பேரின் மரபணு ஆய்வு முடிவுகளில் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்டு முடிவுக்காகக் காத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!