ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு  காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று காலை சோபியான் மாவட்டத்தில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

சவ்ஹம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, பாதுகாப்பு படையினரை நோக்கி அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி துப்பாக்கி சூடு நடத்தினான். துரிதமாக செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடி கொடுத்தனர், இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில்  2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்பகுதியில் வேறு தீவிரவாதிகள் இருக்கிறார்களா? பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!