சுனாமி நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் மலர் தூவி மரியாதை

17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை யொட்டி புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலை பின்புறத்தில் அரசு சார்பில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் சுனாமியால் உயிர்ழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்தும் கடற்கரையில் பாலை ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர், தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சிவா, மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர், அதிமுக சார்பில் புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவ கிராமத்தில் அதிமுக கிழக்கு மாநில செயலாளர் தலைமையில் மீனவ மக்கள் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்,மேலும் அரியாங்குப்பம் வீராம்பட்டினம் வைத்திக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம்ங்களை சேர்ந்தவர்கள் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்…

Translate »
error: Content is protected !!