தெலுங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 6 நக்சல்கள் சுட்டு கொலை

தெலுங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கிஸ்தாராம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை மத்திய பாதுகாப்புப் படையினரும், இரு மாநில போலீஸாரும் சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Translate »
error: Content is protected !!