ஆட்சியரிடம் 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் மனு

73-மாதம் வழங்காத அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயுலின் முன்புறம் 11- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள்   200-க்கும் மேற்பட்டோர் முக்கிய கோரிக்கையாக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய சுமார் 85,000/-தொழிலாளர்கள் ஓய்வூதியத்தில் அகவிலைப்படியில் மாற்றம் செய்யாமல் 2015- நவம்பர் மாதம் முதல் உயர்வில்லாத அகவிலைப்படி பெற்று வருவதாகவும், மாநிலம் முழுவதும் அரசு பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காலக்காப்பீடு திட்டம் அமலில் உள்ள நிலையில் தங்களுக்கு அத்திட்டம் வழங்கப்படவில்லை எனவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Translate »
error: Content is protected !!