2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்

கடலோர மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்,  சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும்,  புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!