இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.

கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மராட்டியம், டெல்லி, கேரளா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம், அரியானா, உத்தரகாண்ட், சண்டிகார், காஷ்மீர், உத்தரபிரதேசம், கோவா, இமாசலபிரதேசம், லடாக், மணிப்பூர் என 27 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. 

தமிழகத்தில் ஏற்கனவே 34 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி – 238 பேர், மராட்டியத்தில் 167 பேர், குஜராத்தில் 73, கேரளாவில் 65, தெலுங்கானாவில் 62, ராஜஸ்தானில் 46, கர்நாடகாவில் 34, தமிழ்நாட்டில் 34, ஹரியானாவில் 12, மேற்கு வங்கத்தில் 11, மத்தியப் பிரதேசத்தில் 9, ஆந்திராவில் 6, உத்தரகாண்டில் 4, சண்டிகரில் 3 பேர், ஜம்மு காஷ்மீரில் 3 பேர், உத்தரப் பிரதேசத்தில் 2 பேர், கோவாவில் ஒருவர், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவர், லடாக்கில் ஒருவர் மற்றும் மணிப்பூரில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இதுவரைஒமைக்ரான் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 167 பேரில் 61 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் டெல்லியில் இதுவரை 165 ஒமைக்ரான் நோய்த்தொற்றில் 23 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான 238 பேரில் இதுவரை 57 பேர் குணமடைந்துள்ளதாகவும், மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான 167 பேரில் 72 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!