ஒரு கோடி வாக்குகள் பெற்றால் ரூ.70க்கு மதுபானம் – ஆந்திர பாஜக தலைவர் வாக்குறுதி

பாஜக ஒரு கோடி வாக்குகள் பெற்றால் ரூ.70க்கு மதுபானம் விற்கப்படும் என்று ஆந்திர மாநில பாஜக தலைவர் உறுதியளித்துள்ளார்.

ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது, 2024ல் ஆந்திராவை பாஜக கைப்பற்றும், அதற்கு, மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பாஜகவுக்கு மக்கள் ஒரு கோடி வாக்களித்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ரூ.70க்கு மதுபானம் வழங்குவோம். அதுமட்டுமின்றி, அதிக அளவு நிதி இருந்தால், ரூ.50 விலையில் மதுபானம் வழங்கப்படும்,” என்றார்.

Translate »
error: Content is protected !!