மெரினாவிற்கு செல்ல தடை – ரோந்தில் போலீசார்

ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் இருக்கக்கூடிய கடற்கரையில் பொதுமக்கள் மணற்பரப்பில் செல்வதற்கு இன்று முதல் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. சென்னை பொறுத்தவரையிலும் நாளுக்கு நாள் அவற்றின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய சூழலில் சென்னை மாநகராட்சி சார்பாக இன்று முதல் பொதுமக்கள் கடற்கரையில் உள்ள மணல் பரப்பை செய்வதற்கு தடை விதித்துள்ளது. மேலும் காலையில் நடை பயிற்சி மேற்கொள்வதற்கு சர்வீஸ் சாலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மறு அறிவிப்பு வரும் வரை மணற்பரப்பில் பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என்று சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்று முதல் கடற்கரையில் உள்ள மணற்பரப்பு பொதுமக்களை காவல்துறையினர் அனுமதிக்காமல் அனைத்து வாயில்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!