வாகனம் மோதி சிறுத்தை பலி

சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுத்தை உயிரிழந்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் திம்பம் மலைப்பாதை 1-வது கொண்டை ஊசி வளைவின் முன்பு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை, சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தை உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், சிறுத்தையின் மீது மோதிய வாகனம் எது? என பண்ணாரி சோதனைச் சாவடியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்……..

Translate »
error: Content is protected !!