அரசு அதிகாரிகள் வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து

டெல்லியில் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுமுறையும் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!