இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை – பிரதமர் மோடி

கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் அவர் பேசியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. நாட்டின் விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் சாதனைகளுக்கு நன்றி.

அடுத்த 5 நாட்களில் 15-17 வயதுள்ள 1.5 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளோம்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

Translate »
error: Content is protected !!