மாநிலத்தில் 200 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 200 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 280 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 234 நபர்களுக்கும், காரைக்காலில் 27 நபர்களுக்கும், மாஹேவில் 19 நபர்களுக்கும், என மொத்தம் 280 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தில் தற்போது 825 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதுச்சேரியில் ஒருவர்   உயிரிழந்ததை அடுத்து உயிரழந்தவர்களின்  எண்ணிக்கை 1882 ஆக உயர்ந்துள்ளதுமேலும் மாநிலத்தில் இதுவரை 1,27,571 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,30,278 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக 100 க்கு கிழும், ஒற்றை இலக்காகவும் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 100 ஐ தாண்டியதை அடுத்து தற்போது 280 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்ற பிராந்தியங்களை விட வெகு விமரிசையாக புத்தாண்டு கொண்டாப்பட்ட புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 234 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!