முன்விரோதத்தால் ஒருவர் படுகொலை

நாமக்கல் அருகே முன்விரோதம் காரணமாக தனியார் நூற்பாலை மேற்பார்வையாளரை கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர், தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் நிலையில் பணி, முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, பள்ளிபாளையம் காவிரி ஆற்றின்கரையோரம் சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த ஸ்டீபன்ராஜ்க்கும் இவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்டீபன்ராஜ் கத்தியால் தாக்கியதில் குமரேசன் பலத்த காயம் அடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!