டெல்லி: கூடுதல் கமிஷனர் உட்பட ஆயிரம் போலீசாருக்கு கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி போலீசாருக்கு அதிக அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. டெல்லியில் உள்ள காவல்துறை தலைமையகம் உட்பட அனைத்து பிரிவுகள் மற்றும் அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையாளர் சின்மோய் பிஸ்வால் உட்பட ஆயிரம் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!