பாதயாத்திரை நடத்திய 30 பேர் மீது வழக்கு

கொரோனா விதிகளை மீறி, பாதயாத்திரை நடத்தியதாக 30 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அங்கு மேகதாது அணையை விரைந்து கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் நேற்று மாபெரும் பாதயாத்திரையை துவங்கியது. இந்த பாதயாத்திரை 10 நாட்கள் நாட்கள் நடைபெறும் என மாநில காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி மாபெரும் பாதயாத்திரை நடத்தியதாக 30 பேர் மீது மாவட்ட போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதனை உறுதி செய்த உள்துறை அமைச்சர் அராக ஞானேந்திரா,  விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!