893 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா, கடந்த 24 மணி நேரத்தில் 893 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 801 நபர்களுக்கும், காரைக்காலில் 60 நபர்கள், ஏனாமில் 10 நபர்களுக்கும், மாஹேவில் 22 நபர்களுக்கும் என மொத்தம் 893 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது 3203 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதுச்சேரியில் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1883 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 1,27,673 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,32,759 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

Translate »
error: Content is protected !!