இன்று முதல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

நியாய விலைக்கடைகளில் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை இன்று முதல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.. இது தொடர்பாக அனைத்து மண்டல ஆணையர்களுக்கும் கூட்டுறவுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு 65% பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று வழக்கமாக வழங்கப்படும் ஜனவரி மாதத்திற்கான இன்றியமையாத பண்டங்களை இன்று முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கவும் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது…

Translate »
error: Content is protected !!