மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்

நாடு முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மருத்துவ ஆக்சிஜன் உகந்த அளவில் இருப்பு இருப்பதை மாநில அரசுகள் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடுமுழுவதும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் 48 மணிநேரத்திற்கு நோயாளிகளுக்கு தேவையான போதுமான மருத்துவ ஆக்சிஜன் இருப்பு இருப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் கொரோனா தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடதக்கது

Translate »
error: Content is protected !!