செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தரமணியில் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. சென்னை பெரும்பாக்கத்தில் 24 புள்ளி 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை கடந்த 12-ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிலையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


Translate »
error: Content is protected !!