2000- ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்கு பின் ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி 2093 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் சிகிச்சை பலனின்றி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 1715 நபர்களுக்கும், காரைக்காலில் 279 நபர்களுக்கும், ஏனாமில் 54 நபர்களுக்கும், மாஹேவில் 45 நபர்களுக்கும் என மொத்தம் 2093 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தில் தற்போது 10393 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதுச்சேரியில் இருவரும், காரைக்காலில் ஒருவரும் என 3 நபர்கள் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1893 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,28,424 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,40,710 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!