முருகனுக்கு மிளகாய் அபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது. அனந்தபுரத்தில் மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமன் தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான மிளகாய் அபிஷேக பூஜை சுவாமிக்கு சிறப்பாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா.. வேல்.. வேல்.. வெற்றிவேல்…. போன்ற கோஷங்கள் எழுப்பி முருகனை தரிசித்து பரவசமடைந்தனர். பின்னர் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட மிளகாய்பொடி கரைசலை போட்டிபோட்டு எடுத்து சென்றனர்.

Translate »
error: Content is protected !!