குடியரசு தின விழா: சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்..!

வரும் 26ம் தேதி குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் மெரினா காமராஜ் சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, விமான நிலையம், கவர்னர் மாளிகை, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் தொடர் சோதனை மற்றும் கண்காணிப்பு நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!