இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும். நேற்று 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 ஆக இருந்தது. நேற்று 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேரும், நேற்று முன்தினம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேரும், சனிக்கிழமை வரை 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேஐ விட குறைவாகும்.

இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 97 லட்சத்து 99 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 753 பேர் கொரோனா தொற்றிலுருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சத்து 71 ஆயிரத்து 898 அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 614 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 462 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!