இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் வரும் 27ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வரும் 28ம் தேதி கடலோர மாவட்டங்கள், அரியலூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!