மத்திய பட்ஜெட் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 31ஆம் தேதி காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும் நிலையில், அதைத் தொடர்ந்து  வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அன்றைய தினம் மாலை பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!