ஆளுநருடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் முதல்வர் எடப்பாடி!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திகவிருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி திடீரென ரத்து செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க திட்டமிட்டு இருந்தார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திடீரென ஆளுநருடனான சந்திப்பை முதல்வர் பழனிச்சாமி ரத்து செய்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Translate »
error: Content is protected !!