இரவு நேர ஊரடங்கு பிப். 4 தேதி வரை நீட்டிப்பு

குஜராத்தில் 27 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து குஜராத்தில் இரவு நேர ஊடங்கு விதிக்கப்பட்டது. பல மாநிலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் 27 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புதிய கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.  இதில் 17 நகரங்களில் உணவு டெலிவரிக்கு அனுமதி போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!