தனியார் ஸ்கேன் மையத்தில் தீ விபத்து

மதுரை அருகே தனியார் ஸ்கேன் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை அருகேயுள்ள டாக்டர் தங்கராஜ் சாலையில் தனியார் ஸ்கேன் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பரவிய நிலையில் ஸ்கேன் மையத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உடனடியாக வெளியேறியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!