அனைத்து கடற்கரையிலும் குவிந்த மக்கள்

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் இன்று முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடற்கரைகளுக்கு மக்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தொற்றின் அளவு படிப்படியாக குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று முதல் மீண்டும் சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!