குறைந்து வருகிறது கா‌ய்க‌றிகளின் விலை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருவமழையால் பயிர்கள் சேதம், வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதைத்தொடர்ந்து காய்கறிகளின் விலை படிப்படியாக சரிவடைந்து வருகிறது.

உச்சத்தை தொட்ட தக்காளி விலை தற்போது வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், ஒரு கிலோ 18 ரூபாய் வரை விற்பனையாகிறது. வெங்காயம் கிலோ 24 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 28 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. காய்கறிகளின் விலை குறைந்து வருவதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!