சமத்துவ சட்டத்திற்கு எதிரான உடைகளை அணியக்கூடாது

சமத்துவ சட்டத்திற்கு எதிரான உடைகளை அணிந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது என கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில்  இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி ஒன்றில்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து  போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று சீருடைக்கு மேல் காவி சால்வை அணிந்து மாணவர்கள் பேரணியாக வந்தனர். இதையடுத்து  பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சீருடை அணிந்து மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என மாநில கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!