சத்தியமங்கலம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்தை வழி மறித்து பேருந்து ஓட்டுநரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து பண்ணாரி நோக்கி சென்ற அரசு பேருந்தை கந்தசாமி என்ற ஓட்டுநர் இயக்கியுள்ளார். அப்போது சமத்துவபுரம் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் கைக் குழந்தையுடன் கீழே இறங்குவதற்கு முன்பே திடீரென பேருந்தை டிரைவர் நகர்த்தியதால் குழந்தை கீழே விழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண் பேருந்து டிரைவரிடம் இறங்குவதற்கு முன்பே ஏன் பேருந்தை எடுத்தீர்கள் என்று கேட்டபோது ஓட்டுனர் அந்தப்பெண்ணை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் பேருந்தை வழி மறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.