விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு தொடர வேண்டும் என உத்தரவு

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் வருடம் மார்ச் 29 ல் திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற போது கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.இவ்வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன் மற்றும் சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க வேண்டுமெனவும், அடுத்தக்கட்ட விசாரணையை சிறப்பு  புலனாய்வு  குழு தொடர வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!