தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடுத்து நிறுத்த முயற்சிக்கும், கர்நாடக அரசை கண்டித்தும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டம் தீவிமடைந்து வருகிறது. அதற்கு எதிராக காவித்துண்டு போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக அரசு, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Translate »
error: Content is protected !!