நாட்டில் குறைந்தது வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா 3வது அலைக்கு பின் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அண்மைக்காலமாக புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அந்தவகையில் நேற்று புதிதாக 50 ஆயிரத்து 407 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது எனவும், இதனால் தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 6 லட்சத்து 10 ஆயிரத்து 443 ஆக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் தீவிர தொற்றுக்கு 804 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 962 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 172 புள்ளி 29 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!