துப்பாக்கி சூட்டில் மத்திய பாதுகாப்பு படை வீரர் பலி

சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், மத்திய பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் பரிதாபமாக உயிரிழந்தார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே புட்கெல் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அறிந்து அங்கு தேடுதல் பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் பசகுடா போலீசார் ஈடுபட்டனர். இதில் நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிக்க முயன்றதில், குண்டு பாய்ந்து உதவி கமாண்டன்ட் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சத்தீஸ்கர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!