உக்ரைன் மீது ராணுவ தாக்குதலை தொடங்கிய ரஷ்ய படை

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தனது படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டதை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கியேவில் ரஷ்ய படை தாக்குதலை தொடங்கியுள்ளது.

உக்ரைன் எல்லையில் முகாமிட்டிருந்த ரஷ்ய படைகள் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளன. உக்ரைன் தலைநகர் கியேவில் உள்ள அந்நாட்டின் சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றும் வகையில் ரஷ்யா  தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாகவும், இதற்கு உக்ரைன் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!