தமிழகம் முழுவதும் 60 துணை ஆட்சியர்கள் மாற்றம்

தமிழகம் முழுவதும் 60 துணை ஆட்சியர்கள் தமிழக அரசால் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சவுந்தர்யா, மதுரை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மைதிலி, சென்னை மாவட்ட நில நிர்வாக உதவி ஆணையராகவும், நீலகிரி மாவட்ட கலால் உதவி ஆணையர் எம்.மணி, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் மொத்தம் 60 துணை ஆட்சியர்கள் தமிழக அரசால் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!