உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர பேருந்து ஏற்பாடு : ரஷ்யா

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர பேருந்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினரை அழைத்து வர ரஷ்யா பேருந்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ், சுமி மாகாணங்களில் இருந்து ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதிக்கு இந்திய மாணவர்கள் மற்றும் பிற வெளிநாட்டினரை வெளியேற்ற 130 பேருந்துகள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!