சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை துவக்கம்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, காணொலி காட்சி மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நேரடி விசாரணை முறைக்கு திரும்பியுள்ளது. காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள தொடர்பு உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், வழக்குகளை விரைந்து முடிக்க இயலவில்லை எனவும் சக நீதிபதிகள் தெரிவித்ததையேற்று நேரடி விசாரணை இன்று முதல் துவங்கும் என தலைமை நீதிபதி முனீஷ்வர் பண்டாரி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இருப்பினும், காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!