திமுக வேட்பாளர் பதவி விலக வலியுறுத்தல்

திமுக வேட்பாளர் பதவி விலக வலியுறுத்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடந்து முடிந்த மறைமுக தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், தலைமையை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்ய வில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர், ஸ்ரீபெருமந்தூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டு, பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினர்.

Translate »
error: Content is protected !!