கொரோனா தொற்று பரவலின் நிலவரம்

 

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர தொற்று பாதிப்புக்கு நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 741 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ளதாகவும், இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 23 ஆயிரத்து 913 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 181 கோடியே, 56 லட்சத்து ஆயிரத்து 944 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!